‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு

1 Min Read

தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது மூலமும் – இனி ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றே அழைக்கலாம்.

‘மாற்றுத் திறனாளிகள்’ என்பது எப்படி, மனிதத்தை அவர்களுக்குத் தரும் மாற்றுச் சொல்லோ –  அதுபோல இவர்களுக்கும் ‘மருத்துவப் பயனாளிகள்’ என்பது மன அழுத்ததை மாற்றக் கூடும் என்பதால் அரசு பரிசீலிக்கலாம் என்ற நாம் விடுத்த அன்பு வேண்டுகோளைத் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து – ஏற்று, ஆணை வழங்கியதைப் பாராட்டி, நன்றி தெரிவிக்கிறோம். உடனடியாக  செயலுக்குக் கொண்டு வந்த மருத்துவத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் நமது நன்றி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

9.10.2025 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *