இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

1 Min Read

நாத்திக கூட்டமைப்பின் தேசிய செயற்குழுவில் தீர்மானம்

அரசியல்

கோழிக்கோடு,மே 22- இந்திய நாத்திக கூட்டமைப்பின் [திமிஸிகி]  தேசிய செயற்குழு கூட்டம் 14.05.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு நகரில் உள்ள நாலந்தா ஓட்டலில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் பேரா. முனைவர்.நரேந்திர நாயக் தலைமை ஏற்று நடத்தினார். கேரளா நாத்திக சமாஜம் பொறுப்பாளர் இரிங்கல் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்திய செயலாளர்கள் தங்களது அறிக்கையை படித்தனர். தொடர்ந்து பொதுச்செயலாளர் தனது அறிக்கையை வழங்கினார். செயற்குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டு அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும், அமைப்பை விரிவாக்குவது பற்றியும் கலந்துரையாடி னார்கள்.

அமைப்பை பதிவு செய்வது பற்றிய நடவடிக்கைகள் பற்றி பொதுச்செயலாளர் பேரா.முனைவர். சுடேஷ் கோடிராவ் எடுத்துரைத்தார்.

அமைப்பின் பொருளாளர் ஹர்சந்த் சிங் பிந்தர் வரவு- செலவு அறிக்கையை படித்தார். தொடர்ந்து நிருவாகக் குழு உறுப்பினர்கள் தங்களது கருத்தை வழங்கினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் திமிஸிகி  அமைப்பின்  தேசிய துணைத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், தேசிய செயலாளர் வி.மோகன் ஆகியோர் பங்கேற்று கருத் துகளை பதிவு செய்தனர்.

கூட்டத்தின் இறுதியில் கீழ்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1:. என்.சி.இ.ஆர்.டி. மற்றும் சி.பி.எஸ்.சி. பாடப் புத்தகங்களில் இருந்த,பரிணாம வளர்ச்சி தொடர்பான சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட அவற்றை உடனடியாக மீண்டும் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.

2) இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில்  சேர்க்கவேண்டும்.

3) எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள், மதம் என்று குறிப்பிட வேண்டிய  இடங்களில்  ‘மனித நேயம்’ என்னும் தனிப்பட்ட  வகையினர்   என்று எழுத வகை செய்யவேண்டும்..

4) பெரும்பான்மை அல்லது சிறுபான்மை மதங்களில் குறிப்பிடப்பட்ட சட்டங்களைத் தவிர்த்து இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் அமல்படுத்தப்படவேண்டும்.

இறுதியில் அடுத்த கூட்டம் பற்றிய அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தலைவர் அறிவித்து நன்றி கூறி முடித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *