மயிலாடுதுறை மாவட்டம் கண்டியூர் கலியன் மறைவு

1 Min Read

மயிலாடுதுறை, அக். 9- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெரியார் தொண்டர் கண்டியூர் கலியமூர்த்தி (வயது 94)  அவர்கள் 7.10.2025 மாலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

மாவட்ட கழகத்தின் சார்பில் 8.10.2025 அன்று காலை அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவரது உடலில் திராவிடர்கழக, திராவிட முன்னேற்றக் கழக கொடிகள் போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திமுக உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் பி.கல்யாணம், கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கு.இளமாறன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் தி.சபாபதி, விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன் மற்றும் திராவிடர்கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *