கழகக் களத்தில்…!

1 Min Read

9.10.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)* நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 22.10.2025 புதன்கிழமை அன்று வேலூர் வருகை, பெரியார் உலகம் நிதி திரட்டல், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல். * நன்றியுரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி தலைவர், தி.க.) * ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

10.10.2025 வெள்ளிக்கிழமை
தமிழர் தலைவரிடம்
நிதியளிப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர்: திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தஞ்சாவூர் மாநகர திராவிடர ்கழகம் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி *மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை *இடம்: பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம் தஞ்சாவூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *