பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியீடு

1 Min Read

சென்னை, மே 22- பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்களுக்கான குருப்-சி, குருப்-டி பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக தேசிய அளவில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை எஸ்எஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-2024ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை எஸ்எஸ்சி இணையதளத்தில் (<www.ssc.nic.in>) வெளியிட்டுள்ளது.

அதன்படி, மெட்ரிக் மற்றும் பிளஸ் 2 கல்வித்தகுதி கொண்ட பணிகள், இளநிலை பொறியாளர், சுருக் கெழுத்தர். ஒன்றிய காவல் படை உதவி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள்இதில் இடம் பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *