தமிழ்நாட்டை ஆராய்ச்சிக்கான தலைநகராக மாற்ற முயற்சி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு

 

சென்னை, அக்.8- ”தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு சார்பில், ‘தமிழ்நாடு நிலைப்பாடுகள் -2025’ என்ற தலைப்பில், இரண்டு நாள் மாநாடு, சென்னை அய்.அய்.டி., ஆராய்ச்சி பூங்காவில் நேற்றுமுன்தினம் (6.10.2025) தொடங்கியது.

இதில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது:

இந்த மாநாட்டில், 150க்கும் மேற்பட்ட பல்கலையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வகைப்பாடுகள் கொண்ட நிலங்களை, எப்படி பயன்படுத்தலாம், எந்த நிலத்தை பயன்படுத்து வது, எந்த நிலத்தை பாதுகாப்பது போன்ற புரிதலை ஏற்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நகர பகுதிகளில் வெப்பத்தை குறைக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதுடன், இந்த மாநாட்டில் அது குறித்து விவாதிக்கப்படும்.

தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

காஞ்சி தனியார் மருத்துவ ஆலைக்கு தாக்கீது

சிறீபெரும்புதூர், அக்.8 வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு தாக்கீது அனுப்​பப்​பட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம், சிறீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் தாக்கீது ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது.

10 குழந்தைகள் உயிரிழப்பு

இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப் இரு​மல் மருந்தை உட்​கொண்ட ராஜஸ்​தான், மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்​தடுத்து உடல் நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 10-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்தனர்.

குழந்​தைகளின் உயி​ரிழப்​பு​களுக்கு இந்த இரு​மல் மருந்​து ​தான் காரணம் என்று ராஜஸ்​தான் மற்​றும் மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களில் புகார்​கள் எழுந்​தன. இதனைத் தொடர்ந்​து, தங்​கள் மாநிலங்​களில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்​கக் கோரி சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் தமிழ்நாடு அரசை வலி​யுறுத்​தின.

இந்த புகாரின் அடிப்​படை​யில், கடந்த 3-ஆம் தேதி, ராஜஸ்​தான், மத்​தியப் பிரதேச மாநிலங்​களின் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் உள்ள தனி​யார் மருந்து உற்​பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்​கொண்​டனர். ஆலை வளாகம் முழு​வதும் ஆய்வு செய்​யப்​பட்ட நிலை​யில், மருந்து தயாரிப்​புக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மூலப்​பொருள்​கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களைப் பறி​முதல் செய்​தனர்.

இந்​நிலை​யில், இந்த முக்​கிய விவ​காரம் குறித்து ஆலை நிர்​வாகத்​திடம் விளக்​கம் கோர, காஞ்​சிபுரம் மண்டல மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி மணிமேகலை நடவடிக்கை எடுத்​துள்​ளார். அவர் இந்த ஆலைக்​குச் சென்​ற​போது ஆலை பூட்​டப்​படிருந்​த​தால், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கோரும் தாக்கீதை ஆலை​யின் வாயி​லில் ஒட்​டி​னார்.

தயாரிக்​கப்​பட்ட மருந்​தில் ஏதேனும் தரக் குறை​பாடு (Sub-standard quality) இருந்​ததா அல்​லது மருந்து தயாரிப்பு விதி​முறை​கள் மீறப்​பட்​டதா என்​பது தொடர்​பாக​வும், மருந்து தயாரிப்​பின்​போது பின்​பற்​றப்​பட்ட தரக் கட்​டுப்​பாடு நடை​முறை​கள், மூலப்​பொருள்​கள் கொள்​முதல் ஆவணங்​கள், சோதனை அறிக்​கைகள் உள்​ளிட்ட அனைத்து தொடர்​புடைய ஆவணங்​களை​யும் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அந்த தாக்கீதில்  தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்​தச் சம்​பவம் குறித்​துக் கேட்​கப்​பட்ட விளக்​கத்தை திருப்​தி​கர​மாக அளிக்​கத் தவறி​னால், மருந்து மற்​றும் அழகு சாதனப் பொருள் சட்​டம் மற்​றும் விதி​களின்​படி, ஆலை​யின் மீது சட்​டரீ​தி​யான கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. ஆட்சேபனைகளை தக்க ஆதாரங்களுடன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *