சென்னை மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு 11ஆம் தேதி எழுத்துத் தேர்வு

கூட்டுறவு சங்கங்களின் சென்னை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங் களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவ தற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 11ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbchn.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 044 – 24614289 என்ற தொலைப்பேசி எண் ணையும் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *