கனரா வங்கியில் வேலை: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கி யான கனரா வங்கியில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: கனரா வங்கி

பணி இடங்கள்: 3,500 (அப்ரண்டீஸ் பயிற்சிப் பணி). தமிழ்நாட்டில் 394 இடங்கள்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

கல்வி தகுதி: 1-9-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 1-1-2022-க்கு முன்போ, 1-9-2025-க்கு பின்போ பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கக்கூடாது.

வயது: 1-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. 1-9-1997-க்கு முன்போ, 1-9-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

உதவித்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு முறை: உள்ளூர் மொழி அறிவு திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட் (திறன் அடிப்படையில் தேர்வு முறை)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *