3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.8   அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம்  (6.10.2025) அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று (7.10.2025) வெளி​யிட்​டது.

அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது.

ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்​ணியத் துகள்​கள் சுவரை துளைத்து மறு​பக்​கம் செல்​கின்​றன. இதுவே குவாண்​டம் ஊடுரு​வல் என்று அழைக்​கப்​படு​கிறது. கடந்த 1984, 1985-ஆம் ஆண்​டு​களில் குவாண்​டம் ஊடுரு​வலை 3 விஞ்​ஞானிகளும் அறி​வியல்​பூர்​வ​மாக நிரூபித்​தனர். இந்த சாதனைக்​காக அவர்​கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மருத்​து​வம், விண்​வெளி, பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள், சூப்​பர் கணினி தயாரிப்பு உட்பட பல்​வேறு துறை​களில் குவாண்​டம் ஊடுரு​வல் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *