மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சக்கட்டம்: தொல்.திருமாவளவன் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, மே 22- விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட் டுள்ள அறிக்கையில், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவ தாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள் ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அது வரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களை வாங்கலாம் என் றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர் குலைவு நடவடிக்கையின் உச்சக்கட்டமாகும். 2016 இல் பண மதிப்பு இழப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபாய், அய்நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. தங்களிடமிருக் கும் ரூபாய் நோட்டுகளை வங் கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

அப்படி மாற்றுவதற்காக வங்கிகளின் முன்னால் கோடிக் கணக்கான மக்கள் கால் கடுக்க நின்றனர். வரிசையில் நிற்கும் போதே பலர் உயிரிழந்தனர். 2016 டிசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரக் ஓப்ரியன் வெளியிட்ட புள்ளிவிவரம் 105 பேர் அப்படி வங்கிகளின் முன்னால் வரி சையில் காத்திருக்கும்போதும், அதிர்ச்சியிலும் இறந்தனர் எனக் கூறியது. இப்போதும் அதே போன்று உயிர்களைக் காவு வாங்குவதற் காகத்தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கி றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது 3.62 லட்சம் கோடி மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக் கின்றன என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. ஒருவர் ஒரு நேரத்தில் பத்து நோட்டு களை மட்டுமே வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பதால் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கான இரண்டாயிரம் ரூபாய் நோட் டுகளை வைத்திருந்தால்கூட 5 முறை அவர் வங்கிக்குச் சென்று மாற்றவேண்டும். இப்போதும் கூட பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலேயே வணிகம் செய்யும் சிறு வணிகர்களை இது மிகப்பெரிய அளவில் பாதிக் கும் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி நாடு முழு வதும் உள்ள ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் நோட்டுக்கென செய்யப்பட்ட மாற்றங்கள் இப்போது வீணாகியுள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் விரயமாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் பின் னால் பொருளாதார நோக்கத் தைவிட அரசியல் நோக்கமே அதிகம் உள்ளதெனத் தெரிகி றது. 2016 இல் உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு முன்பு 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லா மல் ஆக்கப்பட்டன. இப் போது பல மாநிலங்களில் தேர் தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பண மதிப்பழிப்பு அறிவிக்கப் பட்ட அய்ந்தே நாட்களில் குஜராத் மாநிலத்தில் பாஜக வுடன் தொடர் புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் 3118 கோடி ரூபாய் வைப்புச் செய் யப் பட்டதை அப்போதே காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வமாக அம்பலப் படுத்தியது. மேனாள் பிரதமர் மன்மோகன் சிங், அதனால்தான் இதை ‘சட்ட பூர்வமான கொள்ளை’ என விமர்சித்தார். இப்போதும் அப்படித்தான் நடக்கப் போகிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந் துள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகிய வற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். 

அந்த பாதிப்பை இந்த அறிவிப்பு அதிகப்படுத்தவே செய் யும். இந்த முன்யோசனையற்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத் துகிறோம்” என அறிக்கையில் திருமா வளவன் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *