அமைச்சர் தா.மோ. அன்பரசன்அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு!

1 Min Read

காலத்தால் என்றும் பேசப்படும் மாநாடாக அமைந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடு நடத்திட பெரும் உதவியாக இருந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை சந்தித்துத் தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், சமத்துவ மணி ஆகியோர் நெஞ்சம் நிறைந்த நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களிடம் தொலைப்பேசியில் நன்றி கூறினார்.
(சென்னை, 7.10.2025)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

102 வயதாகும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், 103 வயதாகும் பெரியார் பெருந்தொண்டர்
ஆத்தூர் தங்கவேலு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி அவர்களுக்கு கவிஞர் கலி. பூங்குன்றனும்,
தொல். திருமாவளவன் எம்.பி., (விசிக) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எம்.ெஹச். ஜவாஹிருல்லா (ம.ம.க) அவர்களுக்கு வீ. குமரேசன் அவர்களும், மு. வீரபாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

திண்டிவனம் திராவிடர்கழக இளைஞரணி செயலாளர் கடவம்பாக்கம் பொ. தேவராஜ், சவுந்தர்யா இணையர் அடிமைச் சின்னமான தாலியை கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் அகற்றினர். அவ்விணையர்களுக்குச் சால்வை போர்த்திப் பாராட்டினார்
தமிழர் தலைவர் உடன்: அனைத்துக் கட்சி பிரமுகர்கள்.

திராவிடர் கழகம்

ஆ. வந்தியத்தேவனுக்கு (மதிமுக) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *