சென்னை, அக்.7- சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.
நீதிபதி பணியிடங்கள்
டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், கருநாடகா,கேரளா, குஜராத், கவுகாத்தி, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட நாடு முழுவதும் 25 நீதிமன்றங்கள்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,122 ஆகும்.
இதில் 792 நீதிபதிகள் மட்டுமே இப்போது பணியாற்றுகிறார்கள். 161 நிரந்தர நீதிபதிகள், 169 கூடுதல் நீதிபதிகள் என 330 நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அலகாபாத் நீதிமன்றத்தில் 160 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
காலிப் பணியிடங்கள்
மும்பை உயர் நீதிமன்றத்தில் 94 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 26 நீதிபதி பணியிடங்களும், பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 85 நீதிபதி பணியிடங்களில் 25 நீதிபதி பணியிடங்களும், கொல்கத்தா நீதிமன்றத்தில் உள்ள 72 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதி பணியிடங்களும், சென்னை நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 பணியிடங்களில் 19 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தலா 3 நீதிபதிகளை கொண்ட சிக்கிம் மற்றும் மேகாலயா நீதிமன்றங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள பணி யிடங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வழக்குகள் தீர்வை எட்ட முடியாமல் இழுத்துக்கொண்டே செல்லும் நிலை இருக்கிறது.
காரணம் என்ன?
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் 67 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகளை கொலீஜியம் என்ற அமைப்பு தேர்வு செய்து வருகிறது.
நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து கொலீஜியம் அமைப்பு பெறுவதில் ஏற்படும் நடைமுறை தாமதம்தான் சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.