ஆணவத் திமிருக்கு, சதியாளர்களுக்கு, ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்! ‘தமிழ்நாடு யாருடன் போராடும்’ எனக் கேட்ட ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

2 Min Read

சென்னை, அக். 6 தமிழ்நாடு ஆளுநர், ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ எனக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.10.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ஒன்றிய அரசின் ஆணவத் திமிருக்கு எதிராகவும், ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:

“தமிழ்நாடு யாருடன் போராடும்?” என ஆளுநர் கேட்டுள்ளார்…

ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆண வத் திமிருக்கு எதிராகப் போராடும்!

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

உச்சி மண்டை வரை மத வெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெ டுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலை யெடுக்காமல் போராடும்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதி களுக்கு எதிராகப் போராடும்!

ஆளுநரின் அதிகார அத்துமீறல்க ளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறு மைப்படுத்தும் எண்ணம் கொண்ட வர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை – தொழில் வளர்ச்சியை – வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!

ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

உலகத்துக்கே பொதுவான வள்ளு வருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடி யிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதி ராகப் போராடும்!

தொகுதி வரையறை மூலம் தமிழ் நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போரா டும்!

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் ‘நீட்’ எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளி காட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!

நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராக வும் போராடும்!

தமிழ்நாடே வெல்லும்!

இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’’

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் பதி விட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *