தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்

1 Min Read

சென்னை, அக்.6-   சென்னை அய்.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​வரை, 60-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

அதன்​படி, கர்​நாடக மாநிலம் பெங்​களூரில் உள்ள பிஇஎம்​எல் நிறு​வனத்​தில், முதல் தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி​கள் முடிந்​து, கடந்த ஆண்டு அக்​டோபரில் சென்னை அய்.சி.எஃப். ஆலைக்கு வந்​தது. இந்த வந்தே பாரத் ரயி​லில், 16 ‘ஏசி’ பெட்​டிகள் இருக்​கின்​றன. பயணி​களை கவரும் வகை​யில் ஆரஞ்சு, மஞ்​சள் நிறங்​களில் உள்​அலங்​காரம் செய்யப்பட்டுள்ளது. பல்​வேறு கட்ட ஆய்​வுக்கு பிறகு, இந்த தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சென்னை அய்.சி.எஃப். ஆலை​யில் இருந்து டில்​லிக்கு அனுப்​பப்​பட்​டது. 10 மாதங்​கள் கடந்​துள்ள நிலை​யில் தூங்​கும் வந்தே பாரத் ரயில் இன்​னும் பயன்​பாட்​டுக்கு வராதது, பயணி​களிடம் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த மாதம் இறு​தி​யில் இந்த ரயிலை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர ரயில்வே நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது. இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பயணி​களை வெகு​வாக கவரும் வகை​யில், தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. மணிக்கு 180 கி.மீ. வரை வேக​மாக செல்​லும் திறன் கொண்​டது. பயணி​கள் வசதிக்​காக, ரயில் பெட்​டி​யின் உள்​பகு​தி​யில் சில மாற்​றங்​களும் செய்​யப்​பட்​டது. நீண்ட துாரம் செல்​லும் தடத்​தில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயா​ராக உள்​ளது. 2-வது ரயில், தயாரிப்பு பணி​யும் முடிந்​து, அக். 15-க்​குள் வந்து விடும். எனவே, இரண்டு வந்தே பாரத் ரயில்​களும் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்டுவர ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *