டிரம்ப் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

1 Min Read

வாசிங்டன், அக். 6- அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அங்கு சட்டவிரோதமாக தங்கி யிருக்கும் வெளிநாட்டவர்களை தொடர்ந்து கைது செய்து நாடு கடத்தி வருகிறார். ஒரிகோன் மாகாணம் போர்ட்லாண்ட், இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பலர் குடியிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற தேசிய ராணுவப்படை, சட்டவிரோத குடியேற்றத்துறை ஆகியவை முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதன்படி ஒரிகோன் மாகாணம், போர்ட்லாண்ட் மாகாணத்தில் 300 ராணுவ வீரர்களை குவிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த மாகாண நீதிபதி கேரின் இமர்கட் மாகாணத்தில் ராணுவ வீரர்களை குவிக்கும் இந்த நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளார். வருகிற 18ஆம் தேதி வரை இதனை எதிர்த்து ஆளும் அரசாங்கம் வழக்கு தொடரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *