கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.10.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நடிகர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. என்ன மாதிரியான கட்சி இது? விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) தலைமையகம் மற்றும் அதன் நிறுவனங்களில் தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கு 114 காலியிடங் களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை; இடஒதுக் கீட்டிற்கான அரசியலமைப்புச் சட்ட விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா முழுவதும், 25 மாநிலங்களில், சிக்கிம் மற்றும் மேகாலயா உயர் நீதிமன்றங்கள் மட்டுமே முழுமையான நீதிபதிகளுடன்  பணியாற்றுகின்றன; அலகாபாத் 76 காலியிடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் 1, 2025 நிலவரப்படி நீதித்துறை தரவுகளின்படி, இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதிகளில் 330 நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் போராடி வருகின்றன,

* “மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் கும்பமேளா சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓர் ஆணையம் அமைக்க மறுத்த அதே பாஜக அரசு, தேசிய அளவில் சீற்றம் ஏற்பட்ட போதிலும், கரூரில் விரைவாக நடவடிக்கை எடுத்தது. இங்கு ஏன் இந்த அவசரம்? ஏனென்றால் தேர்தல் நெருங்கி வருகிறது,” என்று ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பாஜக எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாடு  ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

* இந்திய சட்ட அமைப்புச் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது என்றும், “புல்டோசரால் அல்ல” என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *