பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 23– தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி வெளியானது. ஏப் ரல் மாதத்தில் நடை பெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட் சம் மாணவர்கள் எழுதி யிருந்தனர்.

தேர்வு எழுதிய 9,14,320 பேர்களில் 4,55,017 மாணவிகளும், 4,59,303 மாணவர்களும் ஆவர். இதில் 8,35,614 பேர் வெற்றி பெற்றனர். அதில் 4,04,904 மாணவர்களும், 4,30,710 மாணவிகளும் ஆவர்.10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்க ளும் தேர்ச்சி பெற்றனர். 

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாண வர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்க கம் அறிவித்துள்ளது. அதன் படி, 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக் கலாம். 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாண வர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே போல இந்த கல்வி ஆண் டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11ஆம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர் வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக் ககம் அறிவித்துள்ளது.

மேலும், தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31 வரையும் விண்ணப் பிக்கலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு  dge.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *