பகுத்தறிவே ஆயுதம்

1 Min Read

நாம் பகுத்தறிவையே ஆயுதமாகக் கொண்டு, இந்திய மத ஏகாதிபத்தியத்துடன் கடினமான போர் துவக்கி னோம். நமது எதிர்கள், புராணங்களையும் பழைய பழக்க வழக்கங்களையும் ஆயுதங்களாகக் கொண்டு நம்மைத் தாக்கினர். நாம் மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது என்றோம். அவர்கள் உயர்வு தாழ்வு, மத சாஸ்திர புராண இதிகாச ஆதாரம் பெற்று நெடுநாட்களாக இந்த நாட்டிலே நிலவிச் சக்கரவர்த்திகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வந்தது என்றனர். அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவைகளையே உறுதுணையாகக் கொண்டு சமூக வாழ்வை நடத்த வேண்டுமென்று நாம் கூறினோம். – மனு சொன்னபடி நடப்பதே மதக் கட்டளை என்றனர் அவர்கள். நாம் அடிமை மனப்பான்மையை வளர்க்கும் புராண ஆபாசங்களையும், வகுப்பு எதேச்சதிகாரத்தை வளர்க்கும் சாஸ்திரக் கொடுமையையும் விளக்கினோம். அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதில், மக்கள் மனதில் அதிலும் இளைஞூர்கள் மனதில் நமது இயக்கம் நன்கு பதிந்துவிட்டது. எவ்வளவு தீவிரமான கொள்கையாக இருப்பினும், அதை வரவேற்க ஆரம்பித்தது வாலிப உலகம். சமதர்மத்தைப் போதித்தோம்; வாலிப உலகம் பூரிப்படைந்தது. இந்நிலையிலே, தமிழ்நாட்டு அரசியல் உலகிலே மாற்றங்கள் ஏற்பட்டன.

– அறிஞர் அண்ணா

(12.12.1937 அன்று நாமக்கலில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரை)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *