ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கண்ட பின்னும் தொடரும் ‘சாதனையோ’ இது?

2 Min Read

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை
பிரிவினரிடையே மீண்டும் தகராறு: வரதராஜ பெருமாள் என்ன செய்கிறார்?

காஞ்சிபுரம், அக். 3- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மீண் டும் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவம் நேற்று ((2.10.2025) நடைபெற்றது. இதற்காக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவது மரபு.

இந்த நிலையில் நேற்று வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடிய நிலையில் மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராக கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திர பாடல் பாட முற்பட்டனர்.

இதன் காரண மாகவேதாந்த தேசிகரை ஆச்சாரியராக கொண்ட வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை ஸ்தோத்திர பாடலை பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில்….

இதை தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல்துறை ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து வடகலை பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிகர் சாற்றுமுறை உற்சவத்தின் போது ஸ்தோத்திர பாடல் பாட தென்கலை பிரிவினருக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தி
ருந்தது.

கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு எப்படி பாடலாம் என வடகலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு போட்ட தடை உத்தரவை உதவி ஆணையர் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார். அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என கேட்டு வடகலைப்பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வடகலை பிரிவினர் நீதிமன்றத்தில் முறையிட போவதாக கூறியதையடுத்து தென்கலை பிரிவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *