கரூர், அக்.3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இதில் 51 பேர் குணமடைந்து கடந்த 29ஆம் தேதி அவர்களுடைய வீடு
களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.
30ஆம் தேதி 53 பேரும், நேற்று முன்தினம் (1.10.2025) ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 5பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின் றனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் ஒருவரும், திருச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய் கட்சியின் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
Leave a Comment