உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 4 முறை கூட்டங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 24 – உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 4 முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் விதமாக, அந்த அமைப்புகளின் வார்டுகள் ஒவ்வொன்றையும், பகுதிக ளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும், ஏரியா சபையை உருவாக்கும் வகையில், 2010ஆம் ஆண்டு அப் போதைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களில் உரிய வகைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.  அந்த சட்ட திருத்தங்களின் கீழ், 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை விதிகள் வெளியிடப்பட்டன.

அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏரியா சபைகளை அமைத்து நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில், முதல் முறையாக, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள், ஏரியா சபைக் கூட்டங்கள் நடந்தன. இவற்றில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

வருடத்துக்கு 4 நாட்கள் இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திலும், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகள் விதிகளிலும், மக்கள் தொகையின் அடிப்படையில், மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டை யும் நான்கு முதல் பத்து பகுதிகளாகவும், நகராட்சிகளில் நான்கு பகுதிகளாகவும் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று பகுதிகளாகவும் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஏரியா சபைகளை அமைக்கவும் மற்றும் ஏரியா சபைகளின் கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் தேவையான வகை முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதியின் படி, ஏரியா சபை கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது, வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும்.

இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபை களின் கூட்டங்களை, ஆண்டுதோறும் தேசிய வாக் காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் தேதி, அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ஆம் தேதி மற்றும் பன்னாட்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் தேதி ஆகிய 4 நாட்களில் நடத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *