மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திண்டிவனம், அக்.2– திண்டிவனம் கழக மாவட் டம் மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொள்கை விளக்கம், திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரப் பயண தொடக்க விழா மற்றும் பெரியார் பகுத் தறிவுப் பலகை திறப்பு விழா 29.9.2025 திங்கட்கிழமை மாலை 4.00.மணி அளவில் தழுதாளி கிராமத்தில் மாவட்ட துணைத் தலை வர் ச.அன்புக்கரசன் தல மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் தா.இளம்பருதி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து மாவட்டதலைவர் இரா.அன்பழகன், பொதுக் குழு உறுப்பினர் பா. வில்ல வன்கோதை ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் மாவட்ட காப்பாளர் செ.பரந்தாமன் பெரியார் பகுத்தறிவு பலகையை திறந்து வைத்து உரையாற்றினார்.

அடுத்து விழாவில் சிறப்புரை ஆற்றிய மாநில திராவிடர் மாணவர் கழக துணை செயலாளர் மு.இளமாறன், ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என திராவிடர் கழகத்தின் கொள்கைகளை விளக்கியும், நூற்றாண்டு நிறைவு விழா காணும் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் ஏற்படுத் திய புரட்சியையும், ரசிக மனப்பான்மையில் வாழ்க்கையை இழக்கும் இளைஞர்களின் சுயமரி யாதை மீட்புக் குறித்தும், பார்ப்பன பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்-இன் ஸநாதன திட்டங்களை விளக்கியும், அதனை எதிர்த்து களமாடும் நம் திராவிட மாடல் அர சின் தேவையை கூறியும் உரையாற்றினார்.

இறுதியாக ஒன்றிய மகளிர் அணி தலைவர் லட்சுமி பாவேந்தன் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.இரமேஷ் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி அன்புக் கரசன்  கன்னியம் கிளை கழக செயலாளர் ர.பழனி தலைவர் இராமதாஸ், மயிலம் ஒன்றிய தலைவர் இரா.பாவேந்தன், தழுதாளி திமுக கிளை செயலாளர் இராமச்சந்திரன், கலை வாணன் வி.சி.க மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *