எத்தகைய மனிதநேயம்!

1 Min Read

விபத்தில் மரணித்த மகனின் உடல் உறுப்புகளை கொடை அளித்த மருத்துவ இணையர்

மும்பை, மே 24 மகாராட்டிராவில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை மருத்துவ இணையர் கொடை செய்தனர். இதன் மூலம் 11 பேர் பயனடைந்தனர்.மகாராட்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரைச் சேர்ந்தவர்கள் மருத்துவ இணையர்களான வினீத் தண்டவதே மற்றும் சுமேதா. இவர்களுடைய மகன் சாகேத் தண்டவதே (30) பெங்களூருவில் உள்ள டிஜிட்டல் செயலி நிறு வனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாகேத், கடந்த 15ஆ-ம் தேதி புனே நகரி லிருந்து பெங்களூருவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சித்ரதுர்கா நகருக்கு அருகே சென்ற சாகேத் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை, அவ்வழியாகச் சென்ற ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் சாகேத் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனிடையே, மூளையில் படு காயமடைந்த சாகேத்தை பெங் களூருவில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதித்துள் ளனர். வென்டிலேட்டர் உதவி யுடன் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்ட போதிலும் கடந்த 19-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் (அய்எம்ஏ) விரார் நகர தலைவரான மருத்துவர் வினீத் மற்றும் கண் மருத்துவரான சுமேதா இணையர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை கொடை செய்ய முடிவு செய்தனர்.

இந்த முடிவுக்கு சாகேத் மனைவியும் மென்பொறியாளரு மான அபூர்வாவும் ஒப்புக் கொண் டார். 5 மாதத்துக்கு முன்புதான் இந்த இணையருக்குக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, சாகேத்தின் சிறுநீரகம், கல்லீரல், கண், இதயம் உள்ளிட்ட உறுப் புகள் கொடையாக வழங்கப்பட் டன. இதன் மூலம் 11 பேர் பயன டைந்ததாக அய்எம்ஏ மகாராட் டிரா செயலாளர் டாக்டர் சந் தோஷ் கதம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *