நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

நைஜீரியா, அக்.2– நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் அமைந் திருக்கும் நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியிலிருந்து எடோ மாநிலத்தை நோக்கி இந்தப் பயணிகள் படகு சென்றுகொண்டிருந் தபோது நடுவழியில் விபத்து நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மழைக்காலங்களில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, படகுகளை முறையாகப் பராமரிக்காமல் பயன்படுத்துவது ஆகியவை இத்தகைய விபத்துகள் தொடர்வதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த மாதம், நைஜர் மாநிலத்தில் அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்றார்கள் என்பது  படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *