பெங்களூரு,மே 24 – கருநாடக மாநில சட்டப் பேரவைத் தலைவராக யு.டி.காதர் பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் யு.டி.காதர் இன்று (24.5.2023) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். யு.டி.காதரை பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.