கரூரில் நடந்தது ஒரு துயர சம்பவம் காவல்துறையினர் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும் திருமாவளவன் கருத்து

2 Min Read

கரூர், செப்.29- கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை.

இதில் அரசியல் விளையாட்டு தேவை யில்லை என்பது என் கருத்து’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் மருத்துவமனை யில் காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர்  திருமாவளவன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கரூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 11 பேரை நேரில் சந்தித்தோம். 65 வயது மதிக்கத்தக்க சுகுணா என்பவர் கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற 10 பேர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். மேலும் இங்கே சிகிச்சை பெறும் பலரையும் சந்தித்தோம்.

அரசியல் விளை யாட்டு தேவையில்லை

தமிழ்நாட்டில் எத்தனை யோ தலை வர்கள், லட்சக்கணக்கான மக்களை திரட்டி கூட்டம் நடத்தியுள்ளார்கள். அப்போதெல்லாம் நிகழாத ஒன்று, முதல்முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தேறியிருப்பது கவலையளிக்கிறது. இதனை கேள்விப்பட்ட வுடனே கரூர் வந்து ஆறுதல் சொல்லியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதியுதவியை அதிகப் படுத்தி வழங்க வேண்டும்.

இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதற்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற முயற்சி, அரசியல் ஆதாயம் கருதி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. விஜய்தான் இதற்கு காரணம் என சொல்வதோ, காவல்துறையினர் காரணம் என சொல்வதோ பிரச்சினைகளை திசை திருப்பவே உதவும். பாதிக்கப்பட்டோருக்கு உதவாது. இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கும் அது உதவாது. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து’ எனத் தெரிவித்தார்.  இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *