கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், மே 25 கேரள மாநிலம் கொச்சி யில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் என்ற இடத் தில் உள்ள குப்பைக் கிடங்கில் சமீபத்தில் ஏற் பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுப் புகை யால் கொச்சி நகர மக்கள் பல நாட்கள் கடும் அவதி யடைந்தனர். இந்த சம் பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.வி.பட்டி மற்றும் பசந்த் பாலாஜி ஆகி யோர் வழக்கை விசாரிக் கின்றனர்.

இந்த வழக்கு விசா ரணை நடைபெற்ற போது பொது இடங் களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கொச்சி மாநக ராட்சிக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டது. பொது இடங் களில் குப்பை கொட்டுபவர் களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகரசபை சட்டத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தவிர தண்ணீர் பாதுகாப்பு சட்டத் தின் படியும் அவர்கள் மீது அபராதம் விதிக்க வேண் டும்.குப்பை கொட்டும் வாக னங்களை கைப் பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னரே அந்த வாகனங்களை விடுவிக்க வேண்டும். குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாத நிறுவ னங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதி பதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *