ஆம்புலன்ஸை த.வெ.க. தொண்டர்கள் தாக்கினர்

1 Min Read

மா.சுப்பிரமணியன்
கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை வழிமறித்து தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் இபிஎஸ் எனவும், தவெக தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய அவரே இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இத்தகைய பேரிடரிலும் இபிஎஸ் அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் புதிய அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டில் இதுவரை 20 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 52 மாதங்களில் 3,000 ரேசன் கடைகள் பிரிக்கப்பட்டு முழுநேரம், பகுதிநேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *