மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 27.09.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து அம்மருத்துவமனையின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.