பெரியார் பாலிடெக்னிக்கில் நாட்டு நலப்பணித்திட்ட கருத்தரங்கு

வல்லம், செப். 29-  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் 24.09.2025 அன்று நாட்டு நலப்பணித் திட்ட தினம் (NSS Day) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில்  தூய்மைப் பணிகள் மற்றும் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

அன்று மதியம் 3.00 மணியளவில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தலைமையேற்று உரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் க.ரோஜா NSS தினக் கொண்டாட்டத்தின் அவசியத்தை எடுத்துரை த்தார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  பெ.மாதவன் விளக்கவுரை ஆற்றினார்.   நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜி.செங்கொடி வரவேற் புரை நிகழ்த்தினார்.  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.நடராஜன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *