பெரியார் மலாயா வருகையின் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் மலேசியா, ஈப்போ மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழாவில் முடிவு

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா பேரா மாநிலம்,  ஈப்போ மாநகரில் உள்ள உணவகத்தில் மிகவும் சிறப்பாக  நடந்தேறியது.  பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி பெரியார் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  ஈப்போ பெரியார் தொண்டர் குழு தலைவர் மா. இலட்சுமணன் தலைமை தாங்கினார். முல்லைச் செல்வன் , கோபி ,  தாப்பா கெ.வாசு, தா.சி. முனியரசன் , முகமது அலி,  கவிஞர் சா. சண்முகம்,  கவிஞர் முத்து பாண்டியன் ஆகியோர்  உரையாற்றினார்கள்.  பெரியார் தொண்டர்கள்,  கழகத் தோழர்கள் , பெரியார் பாசறை தொண்டர்கள், மகளிர் மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மூத்த தொண்டர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டது. 2029இல் பெரியார் மலாயா வருகையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்று இந்த நிகழ்வில்  கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *