அந்நாள் – இந்நாள்

பகத் சிங் பிறந்த நாள்
இன்று (28.9.1907)

பகத் சிங் பொது உடைமை வாதி, பகுத்தறிவாளர், மற்றும் தீவிரமான நாத்திகர் ஆவார். அவரது முக்கியக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்:

நாத்திகம் மற்றும் பகுத்தறிவு:

இவர் எந்த மதத்தையும் சாராமல், கடவுள் நம்பிக்கையை மறுத்து, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தார். சிறையில் இருந்தபோது “நான் ஏன் நாத்திகன்” (Why I am an Atheist) என்ற கட்டுரையை எழுதினார். இதனை ப.ஜீவானந்தம் தமிழில் மொழி பெயர்த்தார். தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

நவ் ஜவான் பாரத் சபா (Navjawan Bharat Sabha) இந்த அமைப்பை 1926இல் நிறுவினார்.

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (Hindustan Socialist Republican Association – HSRA): இந்தப் புரட்சிகர அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டார்.

“இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என்ற முழக்கத்தை இவர் பிரபலப்படுத்தினார்.

மத்திய சட்டசபையில் குண்டு வீச்சு:

1929இல் தன் நண்பர்களுடன் இணைந்து, ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற முழக்கத்துடன் டில்லியில் உள்ள மத்திய சட்டசபையில் (Central Assembly) குண்டு வீசினார். அப்போது குண்டு எறிந்தது மக்களைக் கொல்ல அல்ல, மாறாகப் புரட்சியின் செய்தியைப் பரப்பவே என்று முழக்கமிட்டு சரணடைந்தார்.

பிரிட்டிஷ் அரசு இவர் மீதும், இவரது நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு மீதும் வழக்குத் தொடர்ந்தது.

பகத் சிங் குறுகிய காலம் வாழ்ந்தாலும், தனது புரட்சிகரமான சிந்தனைகள், பொதுவுடைமைக் கொள்கைகள் மற்றும் மத நம்பிக்கையை மறுத்த துணிச்சல் ஆகியவற்றால் இந்திய இளைஞர்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘மாவீரன்’ ஆக இன்றும் போற்றப்படுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *