தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டத்தில் ‘அர்த்தமற்ற இந்துமதம்’ புத்தக அறிமுக உரை

தூத்துக்குடி, செப். 28– தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பி லான 43ஆவது கூட்டம் மஞ்சை வசந்தன் எழுதி யுள்ள ‘அர்த்தமற்ற இந்து மதம்’ புத்தக அறிமுக உரை யாக நடைபெற்றது.

14.9.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் தி.மு.க. இலக்கிய அணி மாவட்டத் துணைச் செயலாளர் மோ.அன்பழகன் தலைமையில், உலகத் திருக்குறள் பேரவைத் துணைச் செயலாளர் பாவலர் கோ.இளமுருகு வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி முன்னிலை  வகித்து உரையாற்றினார்.

அடுத்து ‘அர்த்தமற்ற இந்துமதம்’ புத்தக அறிமுக உரையினைப் பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன் தொடங்கினார். சில உயிரற்ற பொருட்கள், ஒரு குறிப்பிட்ட சூழலில், தட்பவெப்ப நிலையில் சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்த போது அதற்கு உயிர்ப்பு ஏற்பட்டு அசையத் தொடங்குகிறது. அவ்வாறே உயிரிகள் தோன்றின என கூறி உரையை நிறைவு செய்தார். உண்மை வாசகர் வட்டச் செயலாளர் மா.பால்ராசேந்திரம் நிறை வுரையாற்றினார்.

இறுதியாக மாவட்ட கழக துணைச் செயலாளர் செ.செல்லத்துரை நன்றி கூறினார். இந்நிகழ்வினை மாவட்ட ப.க. செயலாளர், சொ.பொன்ராஜ் ஒருங்கிணைத்தார். கி.கோபால்சாமி, பொ.போஸ், சுபாஷ், அ.பார்த்த சாரதி, உலகநாதன், இராமச் சந்திரன், கண்ணன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலாளர் இ.ஞா.திரவியம் ஆகியோர் கலந்து கொண்டு கருத் தினைக் கேட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *