முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து, மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள்கே.என். நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்வி. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.தங்கவேல், அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.