முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து, மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள்கே.என். நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்வி. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.தங்கவேல்,  அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *