ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கருநாடக தேர்தலின் போதும் ராகுல்காந்தி இரு சக்கர வாகனத்தில் சென்று ‘டெலிவரி பாய்’களுடன் உரையாடினார். பேருந்தில் பயணித்து பயணிகளு டன் உரையா டினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி சமீபத்தில் டில்லியில் இருந்து சண் டிகர் வரை லாரியில் சென்றார். அவர் லாரி ஓட்டுநருடன் உரை யாடியபடி பயணம் மேற் கொண்டார்.

லாரியில் ராகுல்காந்தி பயணம் செய்யும் காட்சிப் பதிவை வெளியிட்ட காங்கிரஸ், லாரி ஓட்டுநர் களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள அவர் பயணம் மேற் கொண் டார். இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் உள்ளனர். அவர் களுக்கென்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ராகுல்காந்தி லாரி ஓட்டுந ரின் மனதின் குரலை கேட்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *