வியாசர்பாடி மு.நெடுஞ்செழியன் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

வியாசர்பாடி, செப். 27- சென்னை மாவட்ட திராவிட தொழிலாளர் கழகத்தின் மேனாள் செயலாளரும், ‘பாசறை முரசு’ இதழின் ஆசிரியர் மு.பாலனின் சகோதரருமான மு.நெடுஞ்செழியன் (வயது 83) நேற்று (26.9.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு கோ.செல்வம், கோ.சாக்ரடீஸ் ஆகிய மகன்கள் உள்ளனர்.

கொடுங்கையூர் – திருவள்ளுவர் நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று (27.9.2025) காலை கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

வடசென்னை மாவட்ட கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, துணைச் செயலாளர் வ.தமிழ்ச்செல்வன், இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக், மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் அமைப்பாளர் ச.இராசேந்திரன், எருக்கமாநகர் அமைப்பாளர் சொ.அன்பு, கண்ணதாசன் நகர் அமைப்பாளர் க.துரை, மாதவரம் அமைப்பாளர் சி.வாசு, திராவிட மாணவர் கழக செயலாளர் அ.புகழேந்தி, க.செல்லப்பன், கவின் கிசோர் மற்றும் தோழர்களும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, முல்லை நகர் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்வு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *