62 ேபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, செப்.27-  தமிழ்நாடு முதலமைச்சர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 38 நபர்களுக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 23 மீன்துறை சார் ஆய்வாளர், 12 உதவியாளர் மற்றும் 3 இளநிலை கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணை யத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொழிற்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 15 நபர்களும், விரிவாக்க அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு 3 நபர்களும், என மொத்தம் 18 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கி
னார்.

நியமனம் செய்யப்பட்ட 18 நபர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிவர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe) சிறப்பு நியமனம் அடிப்படையில் 2 உதவிப் பேராசிரியர். 1 பண்ணை மேலாளர் (Farm Manager), 3 குறிப்பான் (Marker), என மொத்தம் 6 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் ந. சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் க.வீ. முரளீதரன்,  பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் இர. நரேந்திரபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *