கல்பாக்கம், மே 25- செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வாயலூரில் 20.5.2023 அன்று சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நகர இளைஞரணி தலைவர் க.குசன், க. ஹரிதாஸ் க.லவன் ஆகியோரின் தந்தையும் திமுகவின் களப்போராளி அவசரநிலை காலத்தில் மிசா கைதியாக பெரியார் வழி நின்ற திராவிட சுடரொளி நா.கெஜி என்கிற கஜேந்திரன் (வயது 65) படத்திறப்பு விழா திராவிடர் கழக நகரத் தலைவர்
மா. விஜயகுமார் வரவேற்புரையுடன் தொடங்கியது.
மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சிறீபக்தவச்சலம் முன்னிலையில் திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர்
பா. மணியம்மை படத்திறப்பு செய்து வீரவணக்கம் முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர். விசிக ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வெற்றிவேந்தன், பெருவள்ளூர்
க.செல்லப்பன், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் குகநாதன், பேரானந்தம், கோவிந்தசாமி, ராமு மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் அனைத்து கட்சி தோழர்கள் அனைவரும் மரியாதை செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர்
மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர்
பா.மணியம்மை சிறப்புரையில், மிசா கைதியாக திராவிடர் கழக, திராவிட முன்னேற்ற கழக தலைவர்கள், தொண்டர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு நிகழ்ந்த கொடுமைகள், திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிகழ்ந்த கொடு மைகளையும் அவர்களின் அளவிடமுடியாத தியாகத்தையும் எடுத்துரைத்தார். தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத் கரும் ஒத்த கருத்துள்ள உறவாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு போராடிய நிகழ்வுகளை விளக்கினார், புத்தரின் பார்ப்பன சனாதன எதிர்ப்பு பரப்புரையை விளக்கினார்
பெரியார் தொண்டர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந் தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்கிறார்கள். எனவே, சுயமரியாதைச் சுடரொளி நா. கஜேந்திரன் அவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் அவருடைய திராவிட இயக்க சிந்த னைகளை வளர்க்க பாடுபட வேண்டும் என சிறப்புரையாற் றினார். கழக நகர செயலாளர் விடுதலை சாமு நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் வாயலூர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.