தாமதமான நீதியின் கொடுமை

1 Min Read

1986-இல் மத்திய பிரதேசத்தில் மின் வாரியத்தின் கட்டன வசூலிப்பாளர் ஜகேஷ்வர் ரூ.100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப். 9-ஆம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடி விட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.67,000 கோடி

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.67,000 கோடி வைப்பு நிதியை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க ஆர்.பி.அய்.   (RBI) அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் இது தொடர்பான விழிப்புணர்வை பயனாளர்களுக்கு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், அவை உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகை என வகைப்படுத்தப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *