முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்

1 Min Read

சென்னை, செப்.26-    விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பன் தலைமையில் விழுப்புரம் நகர்மன்ற மேனாள் துணை தலைவர் பார்த்திபன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தணிகாசலம், கோலியனூர் ஒன்றிய மேனாள் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி கிளாரா உள்ளிட்டோரும், சீர்காழி நகர அ.தி.மு.க. செயலாளர் பாலமுருகன் தலைமையில் நகர துணை செயலாளர் பரணிதரன், சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் வெற்றி செல்வன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். அதேபோன்று பா.ம.க.வைச் சேர்ந்த மேனாள் மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் முனுசாமி, விழுப்புரம் மேற்கு நகர செயலாளர் சையத் முபாரக் உள்ளிட்டோர் பா.ம.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *