‘நான் முதல்வன்’ திட்டத்தில் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு கழக அலுவலர் தகவல்

1 Min Read

சென்னை,செப்.26 நான் முதல்வன் திட்டம் மூலம் ஏராளமான மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழுமம், ஒன்றிய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து தென் மண்டல இளையோருக்கான ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் தொழில் விழிப்புணர்வு குறித்த கருத் தரங்கம் சென்னையில் நேற்றுமுன் தினம் (24.9.2025) நடைபெற்றது.

இதில் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் செயற்குழு உறுப்பினர் வனிதா அகர்வால், ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் அமைச்சர்  ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் வீர ராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் நான் முதல்வன் திட்டம் பற்றி கருத்தரங்கில் எடுத்துரைத்தோம். அனைவரும் நமது செயல் திட்டங்களை வரவேற்று பாராட்டிஉள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்திறன் உள்ளது. சிறப்பான செயல்திட்டங்களை ஒரு மாநி லத்தை பார்த்து இன்னொரு மாநிலம் கற்றுக்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம் மிகவும் உதவியாக உள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் நிறைய போட்டித் தேர்வு மாணவர்களை நாம் தயார்படுத்தி வருகிறோம். அதில் ஏராளமான வேலை வாய்ப்பை பெற்று வருகின் றனர். வரும் காலங்களில் இதை மேலும் அதிகப்படுத்துவோம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *