தமிழ்நாடு காங்கிரஸ் தலை வா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங் கிரஸ் கட்சியினா் நேற்றுமுன்தினம் (24.9.2025) ஆா்ப்பாட்டத்தில் ஈடு பட்டனா்.
சிறீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமை வகித்தார்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதில், மாவட்ட பொறுப்பாளா் நிக்கோலஸ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முருகன் சாந்தகுமார், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு. விவேகானந்தன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவா் சுமிதா பாய், காங்கிரஸ் நிவாகிகள் அணீஸ், நாராயணன், புண்ணியநாதன், அசோகன் உள் ளிட்டோா் கலந்து கொண்டனா்.