திருச்சி, செப். 26- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி 15.09.2025 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கலைப் புல முதன்மையர் முனைவர் என். முருகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் உரை வழங்கினார்.
அவர் தமது உரையில், அரும் செயல்களை செய்து வரும் நிறுவனத் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு பெண்ணினத்தின் சார்பாக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். பொது நலத்தோடு.. கல்வி என்பது நம் அறிவினை பட்டைதீட்டும் ஒரு கருவி. அதனை வெறும் பட்டங்களுக்காகவும் பதவிகளுக் காகவும் புகழுக்காகவும் பெறாமல் இச்சமுதாயத்தை மேம்படுத்துவதற்கும் முன்னேற்று வதற்கும் பயன்படுத்த வேண்டும். அதனைதான் பெரியார் விரும்பினார்கள். சுயநலம் என்பதனை தவிர்த்து பொதுநலத்தோடு ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஜாதி, மதம், இனம் மற்றும் நிறம் இவைகளெல்லாம் நமக்கு தேவையில்லை. நம்முடைய நல்ல எண்ணங்களும் செயல்களுமே இந்த சமுதாயத்திற்கு தேவை.
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டார். இளநிலை மருந்தியல் பட்டப் படிப்பின் முதன்மையர் முனைவர் க. கற்பகம் குமர சுந்தரி பட்டயப்படிப்பின் முதன்மையர் பேராசிரியர் கு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறைத் தலைவர் பேராசிரியர் க. உமாதேவி நன்றி யுரையாற்றினார்.