வடமொழி வேதபாராயணம் தடுக்கப்பட்டது

01.07.1944 – குடிஅரசிலிருந்து…

3.6.44 இரவு பூவாளூர் சிவன் கோவில் எட்டாந் திருவிழா சாமி புறப்பாட்டுடன் வந்த வேத பாராயண பார்ப்பனரை, தமிழில் சொல்லும்படி தோழர் நல்லதம்பி கேட்டார். பாராயணக்காரர்கள் மறுத்தனர். திராவிடர் தெருவில் தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவே பாராயணக்காரர்கள் கலைந்து போய் விட்டனர். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சாமியை ரோட்டிலேயே இறக்கி வைத்து பந்தம், பெட்ரோமாக்ஸ் விளக்குகளை அணைத்துவிட்டு, வேத பாராயண மறுப்பாளர் மீது குற்றம் சாட்ட சூழ்ச்சி செய்தனர். பின் டிரஸ்டியும், கி.முவும், மற்றும் சிலரும் சமாதானம் செய்ய வந்தனர். மறுப்பாளர் இணங்காமற் போகவே, காலை 5 மணியளவில் சாமியைத் தூக்கிச் சென்றனர். பந்தோபஸ்துக்கு வந்திருந்த போலிசார் தோழர்கள் நல்லதம்பி, ஆர்.ரெங்கன், சி.ராமலிங்கம், சி.ரெங்கராசன், வி.ரெத்தினம், ஏ.சீனிவாசன் ஆகியவர்கள் பெயரை எழுதிக்கொண்டு போனதுடன், கி.மு.வும். மேற்படி அறுவர் மீதும் போலிசுக்குப் பிராது செய்ததாகத் தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *