ஆரிய திராவிடப் போர்

ஆரியம் உலகளாவியது மட்டுமல்ல பல அடிப்படை பிரச்சினைகளுக்கு அதன் கோட்பாடுகள் மற்றும் இனவெறுப்பு செயல்கள் போன்றவைகள்தான் காரணம். சார்லஸ் ஆலன் எழுதியுள்ள ஆய்வு நூல் இதைப்பற்றி விளக்குகிறது. ஆரிய பெருமைகளை நிலை நிறுத்த வெளிநாடுகளில் பல அமைப்புகள்  இன்றளவும் செயல்பட்டு  வருகின்றன. Aryan Supremacy – ஆரிய மேலாண்மை, அமெரிக்காவின் – White Supremacy – வெண்மை நிற மேலாண்மை, Aryan Nations Brotherhood – ஆரிய நாடுகளின் சகோதரத்துவம், ஹிட்லர் மற்றும் முசோலினி வழியில் அடிமை முறையையும் கருப்பர்களுக்கு எதிரான வன்மத்தை கொண்ட Neo Confiderate அமைப்பு, தேசியம் பேசுகின்ற தற்போது இந்தியாவில் பேசிப் பொருளாக உள்ள தேசியம் பின்னணி உள்ள   Ultra Nationalists போன்ற அமைப்புகள் ஆரியத்தின் தூய்மையை பாதுகாப்பது திராவிட மறுப்பு, அதை மறக்க எதிரான வேலைகள் செய்வது, ஆரிய இன பெருமிதம் கொள்வது போன்றவற்றை நிலை நிறுத்த ஓயாது செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெரியார் பேசுகின்ற மனிதப்பற்று, சமத்துவ பற்று ஆரியத்திற்கு நேர் எதிரானது. ஆரியம் பேசுகின்ற இன புனிதம், மொழி புனிதம் இவைகளுக்கு அப்படியே எதிராக இனக்கலப்பு மொழிக் கலப்பு குற்றமில்லை என்றும் அவற்றை எவரும் எப்போதும் தவிர்க்க முடியாது… அதனை தடுக்கவும் கூடாது என்றும் மனிதப் பற்றாளர்கள், திராவிட சிந்தனை சமத்துவ பற்று கொண்ட பல்வேறு  கருத்துக்களை பேராசிரியர் அ கருணாநந்தன் ஆரிய திராவிட போர் என்ற தொடர்  தலைப்பில் மிக அருமையாக கூறுவது இன்றே Periyar Vision OTT இல் பாருங்கள்.நன்றி

– ஜெ. மோகனசுந்தரம்

நியூ ஜெர்சி, அமெரிக்கா.

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *