தரச்சோதனை, பாதுகாப்பு நடைமுறைகளில்
எந்தவித சலுகையும் வழங்கப்படாது : அமைச்சர் எ.வ.வேலு
சென்னை, செப்.25 சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பணியை விரைவில், தரமான முறையில் நிறைவு செய்யும் வகையில், முன்னோக்கிய கட்டமைப்பு முறையில், சுமார் 15,000 டன் எஃகு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பணிகள் வதோதரா, அய்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (24.9.2025) நேரில் ஆய்வு செய்து, உற்பத்தி தரத்தையும், பணிகளை விரைவில் முடிக்கும் பொருட்டு, பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி. கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் முன்வார்க்கப்பட்ட எஃகு தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும், தரத்தினையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி முடிந்தவுடன் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும். தரச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது. இந்த மேம்பாலப் பணிகள் நிறை வடைந்தவுடன், அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் பெரிதும் குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும். இம்மேம்பாலம் பன்னாட்டு தரத்திற்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப்பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும் என்று அவர் கூறினார்.