2.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ் புதல்வர்’ திட்டங்கள் தொடக்க விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி பங்கேற்பு

2 Min Read

சென்னை, செப்.25- 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 2025-2026 கல்வி ஆண்டிற்கான ‘புதுமைப்பெண் தமிழ் புதல்வன்’ திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

 திட்டங்கள்

தமிழ்நாடு அரசு, அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத் தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாண விகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத் தின் கீழும், மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

2025-2026 கல்வி ஆண்டிற்கான ‘புதுமைப்பெண் – தமிழ் புதல்வன்’ திட்டங்களின் தொடக்கவிழா 25-ஆம் தேதி (இன்று) மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ் விழாவில் தலைமை ஏற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இவ்விழாவில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

2.57 லட்சம் மாணவர்கள்

கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங் களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான ‘முதல் – அமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ இடம் பெறும். அதைத் தொடர்ந்து ‘நான் முதல்வன்’, ‘விளையாட்டுச் சாதனையாளர்கள்’, ‘புதுமைப்பெண்- தமிழ் புதல்வன்’ மற்றும் ‘அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்’ ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

இவ்வரங்கங்களில் இத்திட்டங் களால் பயன்பெற்றவர்கள், இத்திட் டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று கணிக்கப்பட் டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *