கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக – வைகோ அறிக்கை

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,மே26- மதிமுக பொதுச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மய்யப்பகுதியான சென்னை எழும்பூர் தாளமுத்து – நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜ முந்திரிக்கு மாற்றும் முயற்சியினை மேற் கொண்டபோது, அப்போதைய பெட் ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்   மூலமாக அதை தடுத்து நிறுத்தினேன். இந்நிலையில் தற்போது எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவு அலுவலகத்தை எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதாக தெரிய வருகிறது. அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.

அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த அலுவலகத் தின் கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகம் மாற்றப்பட்டால், எண்ணற்ற இளை ஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறி யாகும். தற் போதைய கணினி யுகத்தில் இந்த மாற்றம் தேவையற்றது. எனவே, ராஜமுந்திரிக்கு மாற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கின்றேன். 

-இவ்வாறு வைகோ  குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *