அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. நாகரிகத்தின் உச்சத்தை தொட்டியிருந்தாலும் அங்கு வெள்ளை கருப்பு என்ற இன வேறுபாடு பேதங்கள் மிகவும் கொடூரமாக நிலவி வந்தது. மார்டின் லூதர் கிங் இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய காந்தி அவர்களை பின்பற்றி அமெரிக்காவில் நிலவி வந்த நிறவெறியை ஒழிக்க போராடி பெருமளவு வெற்றியும் பெற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் மார்டின் லூதர் கிங் பெரியாரைப் பார்த்து இருந்தால் இன்னும் வலுவாக போராடி மேலும் புகழ்பெற்றிருப்பார் என்று நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளார். ஆங்கில மொழியின் சிறப்பு அதில் உள்ள குறைந்த எழுத்துக்களே. கணினிகள் இல்லாத காலத்தில் அச்சு இயந்திரத்தில் நிறைய எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழியின் பிரச்சனைகளை ஓரளவுக்கு குறைக்க பெரியார் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அன்றிருந்த தமிழ் ஆர்வலர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தன்னுடைய விடுதலை பத்திரிக்கையில் எழுத்துச் சீர்திருத்தத்தை 1935இல் நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டார். பின்னர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பெரியார் எழுத்துக்கள் என்று மாற்றம் பெற துவக்கம் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் இதே போல மாற்றம் செய்ய அரசாணை வேண்டும் என்றார்கள். தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ் அறிஞர்கள் பலர் இருந்த காலத்திலும் கூட யாரும் எழுத்து சீர்திருத்தத்தை பற்றி சிறிது கூட எண்ணவில்லை. ஆனால் தந்தை பெரியார் அதை சிந்தித்து செய்தும் காட்டினார். எம்ஜிஆர் அவர்கள் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்த தன்னிடம் கேட்டதையும் அதன் பின்னால் நடந்தவற்றையும் ஆசிரியர் கூறுவதை Periyar Vision OTT இல் இன்றே காணுங்கள்
-T.விசுவநாதன்
களக்காடு
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com