தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு எச்சரிக்கை

1 Min Read

சென்னை, செப். 24- மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-2026ஆம் கல்வியாண்டுக் கான முதலாம் ஆண்டு வகுப்புகள்  நேற்று முன்தினம் (22.9.2025)  தொடங்கினாலும், கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளிடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைகுழு, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி டீன், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அனைத்து தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் மற்றும் தேசிய மருத் துவ ஆணைய வழிகா ட்டுதல்களை தவறாமல் கடைப் பிடிக்க அறிவுறுத் தப்படுகின்றன. 2025-2026ஆம் கல்வி யாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தவிர வேறு அதிக கட்டணத்தைக் கோரினால், அரசாங்கத்தால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவ-மாணவி களிடம் இருந்தோ, பெற்றோரிடம் இருந்தோ இதுதொடர்பாக ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டால், அந்தந்த நிறுவனம் மீது உரிய அதிகாரிகள் மூலம் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் அல்லது கல்லூரியின் இணைப்பை ரத்துசெய்தல் உள் ளிட்ட நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *